வெள்ளி, 11 நவம்பர், 2011

அயலார் குடிப்புகளைப் புறக்கணியுங்கள்


அறிவர் அறிவியலின் அன்பளிப்பு
 தமிழ்மருத்துவம்

பகுதி ஒன்று

  அசித்தர்


வந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும்

தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்








ஏனங்களின் அச்சுறுத்தம்

உணவுகளில் வேதி நச்சு


குளிர் குடிப்பு எதிர்ப்புகள் பற்றிய அலசல்
முதற் பதிப்பு ; மடங்கல் தி.பி.2034                               (செப்.கி.பி.2003)             
   படிப்போர் பயன் குறிப்பு

ஓர் அயிரை ஒரு கிராம்
ஒரு குவளை 250 அயிரை
ஒரு சிறிய கரண்டி 5 அயிரை
ஒரு பெரிய கரண்டி 15 அயிரை

இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை - யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல.
( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.














எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள்
கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கும் கடையில் புட்டிலில் விற்கும் குளிர் குடிப்புகளை வாங்கிப் பரிமாறுவது நாகரிகம் என்கிற நினைப்பில் பலர் இருக்கின்றனர்.  இளைஞர்களோ கையில் ஒரு புட்டிலை பிடித்துக்கொண்டு சுற்றுவது பெருமை என நினைக்கின்றனர்.
இக்குடிப்புகளை அருந்துவதால் வளி / காற்றுத்தொல்லையோடு(GAS) நம் உடலிலுள்ள எலும்பும் கரைந்துபோகும் என்பது நிறுவப்பட்டுள்ளது.
ஒரு சிறு குவளை குடிப்புவில் ஒரு பல்லை போட்டு வைத்தால் பத்து நாட்களில் அப்பல் கரைந்துவிடும் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.  தில்லியில் குளிர் குடிப்பு அதிகமாக அருந்தும் போட்டியில், எட்டு குவளைகள் அருந்தி வெற்றி பெற்ற மாணவன் ஒருவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான் என்பது நாளேடுகளில் வந்த செய்தி.



பொதுவாக நமது உடலிலுள்ள
எலும்புகள் குறிப்பிட்ட அகவை (வயது) க்கு மேற்பட்டு வளர்ச்சியை நிறுத்திவிடுகின்றன.  அதன்பின்பு நாம் உண்ணும் உணவிலுள்ள புளிகத் (ACIDITY) தன்மையைப் பொறுத்து ஆண்டுதோறும் எட்டு முதல் பதினெட்டு விழுக்காடுகள் எலும்பானது கரைந்து மூத்திரம் வழியே வெளியேறுகிறது.
எலுமிச்சம்பழச் சாற்றை அதிக அளவு குடிக்கப் பயன்படுத்தினால் உடலில் உள்ள சுண்ண ஊட்டத்தை அழித்துவிடும். இயற்கை புளிகத்திற்கே இந்நிலை என்றால் வேதி புளிகத்தால் பலவகை கேடுகளும் விளையும். புளியைத் தின்றால் அரத்தம் சுண்டிவிடும் என்று நம் தாய் கவனப் படுத்துவாரே, நினைவிருக்கிறதா?
புளிகத் தன்மை என்பது உணவில் உள்ள சாம்பரியம் (POTTACIUM), சுண்ணம் (CALCIUM), வெளிமம் (MAGNESIUM) ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது.  எனவே புளிகத் தன்மையுள்ள குளிர் குடிப்புகள் நம் பற்களையும் எலும்புகளையும் கரைத்து ஊறு விளைவிக்கச் செய்கின்றன.  இவை  முழுமையாக தவிர்க்கப்படவேண்டிய  கேடுகள். நஞ்சுகள்.

உடல் நலம் தரும் குடிப்பு வகைகள்

நமது தமிழ் மரபிலே சித்தர்களால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட குடிப்புகள் பல. பன்நெடுங்காலமாக மக்கள் இவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.  இவை நமது உடலுக்கு நலம் சேர்ப்பதுடன் நன்மருந்தாகவும் பயன்தருகின்றன.  அவற்றுள் சில,


1.தாமரை
தாமரைப் பூ ஒரு கைப்பிடி எடுத்து தண்ணீரில் போட்டு  தண்ணீர் நன்கு கொதித்ததும் எடுத்து வடிகட்டி சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து குடித்து வருவதன் மூலமாக உட்சூடு, தாகம் ஆகியவை அடங்கிக் கண் குளிர்ச்சி பெறும்.  இதய படபடப்பை குறைக்கும்.  ஆண்களுக்கு விந்து வலுவும் பெண்களுக்கு கருப்பை வலுவும் கூட்டும்.
2.சீரகம்
சீரகத்தை உலர்த்திப் பொடித்து, ஓர்  அயிரை (1 GRAM) அளவாக ஒரு குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம், காற்றுச் சிக்கல், குருதிப்போக்கு, குளிரக் (சீத) கழிச்சல், செரியாக் கழிச்சல், சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல்,வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, உடல்வெப்பம் ஆகியவை தீரும்.

3.கொத்துமல்லி
ஐந்து அயிரை கொத்துமல்லி விதையை இடித்து இரு குவளை நீரில் விட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி வடிகட்டிப் பால் சக்கரை கலந்து காலை மாலை சாப்பிட வலுவிழப்பு, மிகுதாகம், நாவறட்சி, மயக்கம், குருதிக் கழிச்சல், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.  கொத்துமல்லி இலையை பச்சையாக துகையல் அல்லது சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர எரிநறா (சாராய) வெறி நீங்கும்.

4.வெந்தயம்
இரவு படுக்கும் முன் கால் சிறுகரண்டி வெந்தயத்தை நீரில் போட்டு வைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண் நீங்கும்.  வெந்தயப் பொடியை ஒரு சிறு கரண்டியாகக் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மூத்திரப் பிணி குணமாகும்.

5.ஓமம்
தூய்மையான ஓமத்தை வறுத்துப் பொடித்து, ஓர் அயிரை அளவுக்கு நீருடன் கொள்ளப் பசியை மிகுக்கும்.  வயிற்று காற்று தீரும்.

6.மிளகு
அரை அயிரை மிளகுப் பொடியுடன் ஓர் அயிரை  வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கைச் சுற்றி ஏற்படும் சளிச்சவ்வு உளைச்சல் / உளைச்சளி (SINUSITIS), தலைச்சுமை, தலைவலி நீங்கும்.
மூன்று அயிரை மிளகைப் பொடித்து இரு குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும்.  மருந்து வீறு தணியும்.

7.கொட்டைக்கரந்தை
கொட்டைக்கரந்தை இலைப் பொடியை கால் சிறுகரண்டி அளவு ஒரு குவளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, வெல்லம் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை, உள்புண், கழிச்சல் கரப்பான் ஆகியவை தீரும்.  நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு, குடல் ஆகியவற்றை வலுப்படுத்தும்.  மூளை குடலை தூய்மை செய்யும்.

8.வல்லாரை
வல்லாரை இலையை கால் சிறுகரண்டி, நீரில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து குடிக்கவும் அல்லது உலர்த்தி பொடித்து ஐந்து அயிரை எடை காலை மாலை சாப்பிட்டு வர வளி / காற்று, விரைவீக்கம், யானைக்கால், குட்டம், நெறிக்கட்டி, கண்டமாலை, மூத்திரப்பிணி  புண், மாதவிடாய்க் கட்டு (சூதகக்கட்டு) தீரும்.  மூளை வலுவையும் சுறுசுறுப்பையும் சிந்தனைத் திறனையும் தரும்.

9.முளரிப்பூ (ROSE)
10 முதல் 20 அயிரை வரை பூவைக் காய்ச்சி குடிநீராக்கி வடிகட்டி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர வளி, பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.  வெல்லம் சேர்க்காமல் கொப்பளிக்க வாய்ப்புண், வீறு குறையும்.  நீடித்துச் சாப்பிட்டு வர இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, மூத்திரக்காய், குடல், மலவாய் முதலியவை வலுவாகும்.

10.மஞ்சைப்பழம் / எலுமிச்சை  
காலை வெறும் வயிற்றில் மஞ்சைப் பழச்சாறு நான்கு துளிகள், இரண்டு  குவளை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர உடல் சூடு தணிக்கவும் பசித் தூண்டியாகவும் பயன்படும்.

11.சுக்கு
ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி வெல்லம் சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வர வளி / காற்று அகலும்.  பசியுண்டாகும்.  தலைநோய், குளிர்ச்சிவளி, விலாக்குத்து, வயிற்றுக்குத்து, உளைச்சளி, நீர் ஏற்றம், நீர்க்கோவை, மூட்டுப்பிடிப்பு, மலவாய் நோய், பல்வலி, காதுகுத்தல், மூச்சுநோய் தீரும்.

12.இஞ்சி
இஞ்சியை ஒரு சிறுதுண்டு எடுத்து மேல்தோலை சீவிவிட்டு, நசுக்கி  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர கக்கல், குமட்டல், பித்த மயக்கம் தீரும்.
13.நன்னாரி
நன்னாரி வேரை பொடித்து சலித்து வைத்துக் கொண்டு, கால் சிறுகரண்டி பொடியை ஒரு குவளை நீரில் போட்டு இரவே ஊறவைத்து, காலையில் எடுத்து பருகலாம்.  குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு குடித்தல் நலம்.  வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும்.  பித்தம் சமனமாகும்.  உடற்சூட்டைக் குறைக்கும்.  தாது வெப்பத்தை அகற்றும்.  வியர்வை மூத்திரம் பெருக்கும். நோயகற்றி உடல் தேற்றும்.  உரமூட்டும்.  சிறு நஞ்சு, பிளவை மூத்திர நோய், வெட்டைச் சூடு, அதிகப் பசி, தாகம், சொறி சிரங்கு தீரும்.  மஞ்சள் (காமாலை) நோயின் போது குடித்து வரலாம்.  மூலச்சூடு, மூத்திர நோய், அனல் நீக்கும்.

14.வெட்டிவேர்
நன்னாரிக்கு சொல்லிய முறைப்படி ஊறவைத்து குடிக்கலாம்.  வெப்பம் தீரும்.  உடலுக்கு குளிர்ச்சி தரும்.  கோடையில் குடிக்க நல்ல குடிப்புவாகும்.

15.செம்பரத்தம்பூ
பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு கால் சிறுகரண்டி ஒரு குவளை நீரிலிட்டு காய்ச்சி அதனுடன் வெல்லம் பால் சேர்த்து குடித்து வர விந்து கட்டும்.  வெப்பு அகற்றி காமம் பெருக்கும்.  மார்பு வலி, இதய வலுவிழப்பு தீரும்.  ஈரல் வீக்கம், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட புண், நீர்க்கட்டு, உட்சூடு, நீரெரிச்சல் தீரும்.

16.நெல்லி
பொடியை கால் சிறுகரண்டி ஒரு குவளை நீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வெல்லம், தேன் சிறிது சேர்த்து அருந்தி வர உட்சூடு, பித்தம் தணியும்.  மூத்திரப் பிணி அகல இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வரவும்.

17.ஈயெச்சக்கீரை (புதினா)
செரிமானத்தை தூண்டி,உடலின் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.உலர்ந்த ஈயெச்ச இலைகளை தண்ணீரில் ஒரு கைப்பிடி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து குடிக்கலாம்.நரம்பு மண்டலத்திற்கு வலுவூட்டும்.சளி சேராது.பசியைத் தூண்டும். 

      

இதுவரை சொல்லப்பட்ட குடிப்புகளில்  கொதிக்கவைத்து கருக்குநீராக்கி வடிகட்டி அருந்துபவை பலவும் வெறுமனே நீரில் ஊறவைத்து குடிக்கும் குளிர் குடிப்புகள் சிலவும் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக் காட்டுக்காகவே இவற்றை தொகுத்து தந்திருக்கிறோம். நமது இல்லத்திலேயே உள்ள பல பொருள்களைக் கொண்டு நமக்கு வேண்டிய குடிப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
சொல்லப் பட்டவற்றை தனித் தனியாகவோ அல்லது உடல் தேவை பொருட்டு ஒன்றுடன் ஒன்றை கூட்டியோ  பல வகை குடிப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். நறுமணம் வேண்டின் ஒரு மணகம் (ஏலக்காயைத்) தட்டி குடிப்புவில் சேர்த்துவிட்டால் அருமையாகவும் உடல் வெப்பம் தீரவும் செய்யும்.
 தழைநீர் (TEA) குளம்பி (COFFEE) குளிர் குடிப்புகளை (COOL DRINKS) பயன்படுத்தி பணவளம் உடல்வளம் மனவளம் குன்றிப்போய் விட்ட நிலையை நமது அடுக்களை தீர்த்து வைக்கும்.

 

சாப்பிடும்போது சுவைதான்.
உடலில் மாற்றம் ஏற்படும்போது....... திடுக்தானே!
விரைவுணவு என்ற பெயரில் வெந்ததை வறுக்கும் உணவுக் கேடுகள் பெருகிவிட்டன.  மலையகத்திலிருந்து (மலேசியா) வெளியாகும் பயனீட்டாளர் குரல்ஏடு புட்டில்களில்,  அடைப்பியிலிட்ட உணவுகள் (TINNED FOOD) மற்றும் உணவகங்களின் உணவுகளில் என்னென்ன வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றனஅவற்றால் என்னென்ன கேடுகள் விளையும் என குறிப்பிட்டு எழுதியுள்ளது.
புட்டிலில்  அடைக்கப்படும் உணவுப் பொருட்கள் பூஞ்சைக்காளான் பிடித்து கெட்டுப் போகாமல் இருக்க மூன்று வகையான வேதிகள் பயன்படுத்தப் -படுகின்றன.  அவை, கந்தக ஈருயிரகை (SULPHUR DI OXIDE) மற்றும் கந்தகை (SULPHIDE), வெடியகிகள் (NITRATE), கரி நீர் மங்கள் (BENZOATE).



கந்தக ஈருயிரகைகள் மற்றும் கந்தகைகள்
கந்தக வகைகளில் கந்தக ஈருயிரகை(SULPHUE DI OXIDE), உவர்மியக் கந்தகை(SODIUM SULPHIDE), உவர்மிய நீரியக் கந்தகை(sodium HYDRO SULPHIDE), சாம்பரிய தக்கர் தகடம்  (POTTACIUM TIN FOIL), சாம்பரியக் கந்தகை(POTTACIUM SULPHIDE), சுண்ணகக் கந்தகை(SULPHURATED LIME), சுண்ணக நீரிய கந்தகை(SULPHURATED HYDRO CALCIUM), சாம்பரிய இருகந்தகம் (POTTACIUM BI SULPHATE) ஆகியவை.
அரத்திப் (APPLE) பழத்தை நறுக்கினால், உருளைக்கிழங்கை நறுக்கினால் சில நிமையங்களிலேயே நிறம் மாறிவிடும்.  இதைத்தடுக்க கந்தகணக்காடி (SULPHURIC ACID) பயன்படுத்தப்படுகிறது.  பெட்டிக் கடைகளில் பழச் சாற்றை கரைத்து குளிர்பதனப் பெட்டியில் வைக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் இந்த கந்தகணக்காடியை பயன்படுத்த வேண்டி வரும்.  அதே போல் கொடி முந்திரி (GRAPES) அழுகாமல் இருக்க கந்தக ஈருயிரகை பயன்படுத்தப்படுகிறது.  இறால் வகைகள் பார்க்க அழகாய்த் தெரிய கந்தகி பயன்படுத்தப்படுகிறது.  மாழைகளை வெள்ளை வெளேர் என்று வைக்கவும் கந்தகி பயன்படுத்தப்படுகிறது.

கந்தகி பயன்பாட்டினால் என்னென்ன கேடு விளையும் ?
கந்தக ஈருயிரகை (SULPHUR DI OXIDE) - தசை வளர்ச்சி மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும்.

கந்தகி  (SULPHITE)
தீவிர இரைப்பு (ASTHMA), வயிற்றுக் கோளாறு, பார்வை மங்குதல், கிறுகிறுப்பு, மூச்சுக் கோளாறு, நடுக்கம் ஆகியவை ஏற்படுகிறது.  வயவூட்டம் ஆ1 (VITAMIN B1) ஊட்டம் குறைகிறது.

வெடியகைகள் (NITRATES)
வெடியகை வகைகளில் சாம்பரிய வெடியகை(POTTACIUM NITRATE) இருவகைகள், உவர்மிய வெடியகை (SODIUM NITRATE) இருவகைகள் உள்ளன.
விலங்குணவு (NON-VEGETARIAN) மற்றும் மரக்கறி உணவு (VEGETARIAN) சமையல் வகைகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  உணவகங்களில் அழகுப் புனைவாய், பார்த்ததுமே எச்சில் ஊறும் வகையில் ஆட்டு இறைச்சி குழம்பு, கோழி வறுவல் என்று எடுத்து வைக்கிறார்களே!  நாம் வீட்டில் செய்தால் இந்த நிறம் வருவதே இல்லையே....... பார்த்தாலே ஏறுமாறான நிறத்தில், ஒரு வகையான நிறத்தில் வருகிறதே.... இவர்களுக்கு மட்டும் எப்படி அழகான பொன்னிறம் வருகிறது? என்று நினைப்பவர்கள் இதனைப் படியுங்கள்.
மேலே சொன்ன நான்கு வகை வேதிகளில் ஏதாவது ஒன்றை இந்த உணவில் கலந்தால் தான் இளஞ்சிவப்பு நிறத்துடன், நம்மை அயர்த்தும்.  இல்லையேல்.... நம் வீட்டில் செய்வதை விட இழிவான நிறத்தில், குறைவான சுவையில் இவை இருக்கும்.  இந்த வேதிகள், பெரியவர்களை விட சிறியவர்களைச்  சட்டெனத்  தாக்கும்.
எப்படித் தாக்கும்?  அரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் கோளாறுகளை ஏற்படுத்தி கிறுகிறுப்பு, தலைவலி, மூச்சுக் கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.  வயிற்றுக்குச் சென்ற பிறகு, வேறு  காடிகளோடு சேர்ந்து உருவாகும் வேதி வினைகள் புற்றுப் பிணியை  ஏற்படுத்தும்.



கரிமக் கலவைகள்(BENZOATES)
உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுபவை கரிமக் காடி (BENZOIC ACID) உவர்மிய கரிமம் (SODIUM BENZOATE).
பழச்சாறு, ஊறுகாய், சாற்றுகுழம்பு (SOUP), பழக்கூழ் (JAM) மற்றும் கரிமம் (carbon) சேர்க்கப்பட்ட கரிமக்காடி  (BENZOIC ACID) குடிப்புகளில் கலக்கப்படுகிறது.
கோளாறு என்ன?             ஒவ்வாமை, இரைப்பு, தோற்பிணிகள், வயிறு அரிப்பு, நல்ல நுண்ணுயிரிகளை அழிப்பது ஆகியவை உண்டாகும்.  புற்றுப்பிணி இருந்தால் அதை அதிகப்படுத்தும்.
படித்தீர்களா? இனி இந்த வகை உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். நாள்தோறும் இவற்றையே உணவாகக் கொள்வதை கைவிடுங்கள்.
நாள் (தின) மலர்
24-08-2003

சூழ்ந்துவரும் மற்றொரு கேடு

ஒற்றை உவர்மிய தெவிட்டம் (அசினோமோட்டோ)
விரைவு உணவகங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இப்பொழுது சிற்றூர் மக்களையும் ஆட்படுத்தி, பெட்டிக் கடைகளிலும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.
அசினோமோட்டோ என சீன மொழியில் அழைக்கப்படும் இந்த உப்பின் வேதிப் பெயர் ஒற்றை உவர்மிய தெவிட்டம் (MONO SODIUM GLUTAMATE).
கடல் உப்பு (SODIUM CHLORIDE) உடலால் செரிக்கப்பட முடியாத ஒரு பொருள். அதனுடன் படாத பாடு பட்டுக் கொண்டிருக்க, அதன் கூட ஒரு தோழனாக இந்த அசினோமோட்டோ பீடை வேறு.
இது பெரியவர்களைவிட சிறியவர்களுக்கு அதிக கெடுதல்களை விளைவிக்கும்.இவ்வுப்பு கலந்த உணவை உண்ணும் குழந்தைகளுக்கு வரும் கேடுகள்

v       தலைவலி
v       நெஞ்சு வலி
v       தலைச்சுற்றல்
v       கக்கல் (வாந்தி)
v       செரிமானச்சிக்கல்
v       தூக்கமின்மை
v       கெட்ட கனவுகள்
v       சோம்பல்
v       இரைப்பு
v       மிதமாகும் இதயத்துடிப்பு
v       கழுத்துப் பிடிப்பு
v       மூச்சுத் திணறல்
v       முடி கொட்டுதல்
v       பக்கவலிப்பு (பக்கவாதம்)
v       முதுமை நோய்
v       சக்கரைப் பிணி
v       உடல் வளர்ச்சியைத் தூண்டும் சுரப்பு
(HARMONE) குறைந்து, உடல் வளர்ச்சி தடைபட்டு உயரம் குறையும். இதனை கருவுற்ற எலிகளுக்கு கொடுத்து ஆராய்ந்தபொழுது, அவற்றின் குட்டிகளுக்கு மூளைப்பகுதியில் உள்ள இழைமங்கள் (CELL) சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
v       மூளையிலுள்ள கேட்பு சார்ந்த        
அணுக்கருவை (ASCULATE NUCLEUS)  தாக்குவதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

v       இரைப்பை, சிறுகுடல், கல்லீரல்
அழற்சியும் அரத்தக் கசிவும் ஏற்படும். கரணியம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று
வலி தோன்றும்.
v       ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிட்டால
உடனேயே மூச்சுத்திணறலும் மார்பில் எரிச்சலும், வியர்வைப் பெருக்கமும் ஏற்படும்.
விரைவு உணவகங்களில் ஆ (பசு), எருது, பன்றிகளின் கொழுப்பகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒருவகை நெய்யை பயன்படுத்தி உணவு செய்கிறார்கள். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு மிகுப்பது, உடல் பருமன், இதய நோய், புற்றுப்பிணி, போன்றவைகள் உருவாகும்.
ஆதலால் விரைவு உணவகங்களில் உணவு உண்பதை தவிர்ப்பது உடல் நலத்தைக் காக்கும்.
அசினோமோட்டோ உப்பானது உணவகங்களில் மட்டுமல்லாது திருமண விருந்துகளிலும் சமையல் வல்லுனர்களால் கலக்கப்பெறுகிறது. இதனால்தான் திருமண விழாக்களில் சாப்பிடுபவர்களுக்கு உடனடியாக வயிற்றுத்தொல்லைகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளின் நொறுக்குத் தின் பண்டங்களாக அணியமாகக் கிடைக்கும் குர்குரே, இலேய்சு, மேகி (KURKURE, LAYS, MAGIE) போன்றவற்றிலும்   சுவைப்பொடி (TASTE POWDER), கூட்டு நறுமணம் (ADDED FLAVOUR) - என்னும் மறைமுகமான பெயர்களில் அசினோமோட்டோ நமது சமையலறைகளில் புகுந்துவிட்டது.
உணவை சாப்பிட விரும்பாத  நோஞ்சான் பிள்ளைகளுக்கு அசினோ மோட்டோ கலந்த நொறுக்குப் (SNACK) பொட்டலங்களை பெற்றோர் வாங்கித் தருவார்கள். பசியை கட்டுப்பாட்டில் இருத்தும் உடலின் இயற்கை நொதிப்பொருட்கள் அசினோமோட்டோவினால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அசினோ மோட்டோவை தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்து கண்டதை உண்ணத் தொடங்குவார்கள்.
  
பசித்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப் போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.

அசினோமோட்டோவையும் அயலார் குடிப்புகளையும் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு பட்டியலில் முன் குறிப்பிட்ட பல நோய்களை அள்ளி வழங்கும் என அனைத்துலக நாடுகளின் மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.  



இவ்வுப்பை (அசினோமோட்டோ) புறக்கணித்து மக்களி டையே மிகப்பெரிய கருத்துக் கணிப்பை தோற்றுவித்து இக்கொடுமைகளை முறியடிக்கவேண்டும்.    
   
---------------------------------------------------------------------------
      
புதின சமையல் ஏனங்களில்
திடுக்கொடுவினை (அபாயம்)
வெளிநாட்டு குளிர் குடிப்புகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படுவதாகவும், இதனால் புற்றுப்பிணி கொடுவினை உள்ளதாகவும் எழுந்த சிக்கல்களை தொடர்ந்து இப்போது சமையலறையில் ஒரு பூதம் கிளம்பியிருக்கிறது.
அடுகலன் (COOKER), எரிவளி  அடுப்பு (GAS STOVE) என்று சமையலறையில் பயன்படும் பல கருவிகள் நமது வீடுகளில்  முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எரிவளியால் மூச்சுக்கோளாறு உட்பட பல பிணிகள் உருவாவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வாழ்க்கை எந்திரமயமாகிப் போன பின்பு, இதிலும் நிறைய மாற்றங்கள்.  மின்சார அடுகலன் (ELECTRIC COOKER), நுண்ணலைச்  சூட்டடுப்பு (MICROWAVE OVEN) என்று இன்னும் கொஞ்சம் வேகம்.
எண்ணெய் ஒட்டவே ஒட்டாது.  மிக விரைவான வேக்காடுஎன்று நிரம்ப வேகமாக வந்து நடுத்தட்டு மற்றும் மேல்மட்ட இல்லப்பெண்களை கவர்ந்துவிட்டன.  பாயணப்பயினி  (TEFLON COATED) சமையல் ஏனங்கள்.
உடலில் அதிகம் கொழுப்புச் சேர விரும்பாதவர்கள், குண்டு உடம்புக்காரர்கள் இந்த பாயணப்பயினி சமையல் ஏனங்களில் சமைத்து சாப்பிட பெரிதும் விரும்புகிறார்கள்.  ஏனெனில் எண்ணெய் ஊற்றாமலேயே  இதில் பொரிக்கலாம், வறுக்கலாம்.  இதன் கரணியமாக உடலில் கொழும்பு சேர்வது தடுக்கப்படுகிறது என்பது இவர்களது நம்பிக்கையாக இருந்து வந்தது.  இந்த பாயணப் பூச்சு சமையல் ஏனங்கள் தான் இப்போது சிக்கலில் சிக்கியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழுஎன்னும் அமைப்பு. இந்த பாயணப் பூச்சு ஏனங்கள் பற்றி ஆய்வு செய்து அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அதில் பெரும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் பல உள்ளன.
பல்வேறு பெயர்களில் வெளிவரும் இந்த பூச்சுவின் பெயர் பாயணப் பயினி கலவைபூச்சு (POLYTETRA FLURO ETHYLYN)  என்பது.
1949ஆம் ஆண்டு பாயணபயினி அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்று முதல் இன்று வரை சமையலறை ஏனங்கள் முதல் விண்ணில் ஏவப்படும் செயற்கைக் கோள் வரை பல்வேறு பொருட்களிலும் இது பூசப்படுகிறது.
சுற்றுச்சூழல் பணிக்குழுவின் ஆய்வு அறிக்கையானது மிகக் குறுகிய நேரத்திலேயே இத்தகைய சமையல் கலன்களில் வெப்பம் அதி உயர் நிலையை அடைவதையும் அதிலிருந்து நச்சுக்கள் வெளிப்படுவதையும் நிறுவியுள்ளது.  வழக்கமான மண்ணெய் அடுப்பிலேயே பாயணப்பயினி ஏனமானது இரண்டு முதல் ஐந்து நிமையங்களிலேயே நச்சுக்களை வெளியிடுவதாகவும், இதனால் வீட்டிலுள்ள வளர்ப்புப் பறவைகள் இறப்பதையும், மாந்தர்களுக்கு மாழையாலிக் (POLYMER) காய்ச்சல் ஏற்படுவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
சுற்றுசூழல் பணிக்குழு நடத்திய ஆய்வில் மூன்று நிமையம் 30 நொடிகளில் மின் அடுப்பின் எரிவளியானது 390 பாகை (DEGREE) வெப்பம்  சூடாவதாகவும், அதே நிலையில் பாயணம் பூசப்பட்ட கலனானது, ஐந்து நிமையத்தில் 382.7 பாகை வெப்பம் அளவை எட்டுவதாகவும் தெரிய வந்தது. 360 பாகை வெப்ப நிலையிலேயே இக்கலனானது குறைந்தது ஆறு நச்சு காற்றுகளை வெளியிடுவது கண்டறியப்பட்டுள்ளது.  இவற்றில் இரண்டு புற்றுப்பிணியை ஏற்படுத்தக்கூடியவை.  இரண்டு உலகளாவிய மாசுப்படுத்திகள். மற்றொன்று மாந்தர்களுக்கு பெருங் கொடுமை ஏற்படுத்துவது.
குறிப்பாக பாயணப்பயனி ஏனங்களிலிருந்து வெளியாகும் முப்பாயணிய 
(TRI FLURO ACETIC ACID)  காடியானது நீண்டகாலம் அழியாது சுற்றுச் சூழலில் கலந்திருக்கும்.  நீண்ட கால நோக்கில் இதனால் சூழலில் ஏற்படும் தாக்கம் இன்னமும் மதிப்பிடப்படவில்லை.
பாயணம் (FIORIDE) ஏற்றப்பட்ட மாழையாவிகள் (METTALIC VAPOURS) சூடாக்கப்படும் பல்வேறு வெப்ப நிலைகளில், பாயண நச்சுகளை வெளியிடுவதாகவும், அதில் பத்து விழுக்காட்டு அளவுக்கு  முப்பாயணிய காடி (TRI FLURO ACETIC ACID)  இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது நீரில் அதிகளவு கரைந்தால் நிலைத்தினைகளை (PLANTS) நஞ்சாக்கும்.  அதே வேளை சிதைவடைய பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்.  இதுபோல பல்வேறு நச்சுக்கள் வெளியாகின்றன.
பல்கலைக்கழக ஆவணமானது ஒரு கோழிப் பண்ணையில் சூடேற்றப் பயன்படுத்தப்பட்ட பாயணம் பூசப்பட்ட விளக்குகள் 182 பாகை அளவு வெப்ப நிலையில் இருந்தபோதே வெளியான நச்சால் அங்கிருந்த ஆயிரம் கோழிக் குஞ்சுகள் இறந்ததை அம்பலப் படுத்தியுள்ளது.
பாயணப்பயனி பூச்சிலிருந்து வெளியாகும் வேதிப் பொருட்களில் இரு வேதிகள்  புற்றுப் பிணியை ஏற்படுத்துபவை.  வேறு இரண்டு  நிலம் சூடாவதைத் தூண்டுபவை.  வேறு மூன்று வேதிகள் ஆகியவை வேதியல் போர்க் கருவிகளாகும்.  இவற்றின் வளிகளும் எளிதில் அழியாதவை.  நரம்புகளை செயலிழக்கச் செய்பவை.

பாயணப் பயினி
சூடாகும்போது வெளியாகும் வளி, ஆவிகள் பலவகையன. அவை ஒவ்வொன்றும் ஏற்படுத்தும் கோளாறுகளை மொத்தமாக கீழே தொகுத்துத் தருகிறோம்.

v       நுரையீரல், புற்றுப் பிணி                                               
v       கண், மூக்கு  கோளாறு
v        தொண்டை  எரிச்சல்
v       இதயத்துடிப்பு மிகல்     
v       தலைவலி
v       தலை கனத்தல்
v       நுரையீரலில் நீர்சேரல்
v       உயிரையும் பறித்துவிடும்                   நினைவாற்றல் குறையும்
v       எலும்பு, நரம்பு மண்டிலங்கள்,   மூத்திர க்காய் வலுவிழப்பு           
v       குமட்டல், கக்கல் (வாந்தி), மயக்கம்                
v       குறைந்த அரத்த அழுத்தம்
v       நினைவிழப்பு  
v       கண்பார்வை குறை
v       உடல் கூச்சம்   
v       பதற்றம்
v       சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் மற்றும் மூச்சு உறுப்புகள் கோளாறு         
v       மூளைவளர்ச்சி, பருவமடைதல் தடை
v       சளி
v       தோல் நீலமாக மாறும்
v       நெஞ்சுவலி
v       சோர்வு
v       அரிக்கும் வளி / காற்று
v       சுண்ணகப் பற்றாக்குறை
ஆகவே நிலைவெள்ளி (STAINLESS STEEL)  வார்ப்பட இரும்பு ஏனங்கள் தான் சமையலுக்கு ஏற்றவை என்று ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.
- தொலைவரி (தினத் தந்தி) நாளேடு
- 24-08-2003

---------------------------------------------------------------


குளிர் குடிப்பு எதிர்ப்புகள் பற்றிய அலசல்
இன்றைய நாளில் குளிர்குடிப்புகளின் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.  எதிர்ப்புணர்வும் எதிர்ப்பு இயக்கங்களும் எழுந்துள்ளன.  இதில் அரசியலார் பங்கேற்றுள்ளனர்.  பேராய கட்சி  பெயரளவு பங்கேற்பு செய்கிறது.  பொதுவுடமை இயக்கங்கள், தமிழ் உணர்வளர்கள் பங்கேற்கின்றனர்.  எதிர்ப்பில் போலி தன்மையும் உண்டு.   உண்மை தன்மையும் உண்டு.  உண்மை தன்மையின் அகப்பொருளும் புறப்பெருளும் காணப்பட வேண்டும்.

புறப்பொருளாவது
1.             வல்லரசிய ஊடுருவலை வெளிப்படுத்துவது.
2.             பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் கொள்ளையடிப்பது.
3.             பன்னாட்டு நிறுவனங்கள் இப்பொருளை வணிகம் செய்வதன் மூலம் ஈட்டும் பணத்தை அந்தந்த  ஏழை நாடுகளின் இனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுத்துவது.
4.             நம் நாட்டு குடிப்புகளை பயன்படுத்துவதால் பொருளியல் நம்மவர்களின் உழைப்பிற்கும் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உதவும்.

அகப்பொருளாவது
எவரும் இதை தொடவில்லை.
1.             உடல் நலம் என்பதே அகப்பொருள்.
2.             உடல் நலம் அழிந்தால் இனம் அழியும்.
3.             இனமது அழிந்தால் மரபு பின் தங்கும்.  மரபு புலனாகாமல் மறைவாய் தோன்றும்.
4.             மரபு போற்றா இனம் மீண்டு எழுவது கடினம்.  இது இன்றைய நிலை.
                கழக காலத்தில் காதலும் களவு வாழ்க்கையும் அகப்பொருள்.
  போர் நிகழ்வுகள் புறப்பொருள்
                பார்ப்பனர்கள் இடைக்காலத்தில் தெய்வத்தின்மீது காதல் கொண்டு பாடுவதை அகம் என திரித்தனர்.  இதற்கு எதிராய் சமணரும் பவுத்தரும் போருக்கு மாற்றாய் ஐம்புலன்களை அடக்கி ஆள்வதே  வீரம் என திரித்து புறம்பாடினர்.
                நிகழ்காலத்தில் வந்தேறி, வல்லரசிய எதிர்ப்புப்போர் வீரமாகவும் - புறமாகவும், உடல்நலம் போற்ற வல்லவையே காதலுக்கும் நேசத்திற்கும் உரித்தான அகமாகவும்  விளங்குகின்றன.
.
மற்றவர் பார்வை
அகப்பொருள் தேர்வாக சில இயக்கங்கள் பல பொருள்களை முன் வைத்தன.  அவை சரியே ஆயினும் விளக்கம் உணரா மொழியே.  மேலும் அவற்றைப் பயன்படுத்த நெறிமுறை கூறப்படவில்லை.  இளநீர் புளிகத் தன்மை கொண்டது.  வெறும் வயிற்றில் குடித்தல் கூடாது.  காலை உணவு உண்டபின் 11 மணிக்கு மேற்பட்டு குடிக்கலாம். 
பிஞ்சு இளநீர் குடித்தால் தொண்டைக் கட்டு ஏற்படும்.
இளநீர் தூய நீர் என்ற கருத்து உண்டு.  ஆனால் உண்மை என்ன?
 தென்னை மர ஒழிப்பு : உரமூட்டுவதன் பேரிலும், பூச்சிகொல்லி பெயராலும் வேதிகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவு இலக்கக் கணக்கில் தென்னை மரங்கள் அழிந்து விழுந்தன.  மிஞ்சி உயிர்வாழ்வனவற்றில் இருந்து கிடைக்கும் விளைபொருள்களி - லிருந்து மிகுந்து நிற்பது வேதிகளே என்பதை மக்கள் உணரவில்லை.  தேங்காய் உணவில் பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.  இவை - இளநீரும், தேங்காயுமே - மறைமுகமாய் தமிழரை ஒழிக்கும் நச்சுக் கொல்லிகள் ஆகிவிட்டன.  இவ்வகையில் இன்றைய அரிசி கூட நஞ்சுதான்.  இயற்கை உரங்கள் ஊட்டப்பட்ட விளை பொருட்கள் மட்டுமே நலன் தரும்.

தெளிவின்மை
செய்தித்தாள்களில் குடிப்பு, ஏனம் பற்றி வந்த செய்திகள் திடுக், திடுக் என இயல்பாய் ஒலிக்கின்றன.  இவை பற்றி வந்த திடுக்கிடும் செய்திகள் புதியன இல்லை.  10 ஆண்டுகளுக்கு முன்னரே பரவலாக வெளிவந்தவை.  இன்றைக்கு தேசப்பற்று என்று கூக்குரலிடுபவர்கள் அன்றைக்கும் இன்றைக்கும் நமக்கே உரித்தான மரபு குடிப்புகளை பற்றி பேசவும் இல்லை, தம்மளவில் நடைமுறைபடுத்தவும் இல்லை.
இதே சூழலில் இன்றைக்கும் சென்னை பட்டிணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுக்கு நீர் விற்கும் கடைகள் இன்னமும் நீடித்து இருப்பது கண்கூடு. 
நமது சமையலறையில் - குளம்பியும், தழைநீரும், தவிர்த்து - எத்தனையோ வகை குடிப்புப் பொருட்கள் உண்டு.  வெந்தயம், மிளகு, சீரகம், கொத்துமல்லி இலை, மல்லி விதை (தனியா)இஞ்சி, சுக்கு, பெருஞ்சீரகம் (சோம்பு), ஈயெச்சக்கீரை (புதினா), கறிவேப்பிலை, மணகம் (ஏலம்). இவை ஒவ்வொன்றும் தனித்தனிவகையில் மருத்துவ குணமும் சுவையும் கொண்டவை.  தனியாகவோ குணம், சுவை அடிப்படையில் கலந்தோ பயன்படுத்தத் தக்கவை.
அறைக்கு வெளியே உள்ளவையோ பல. தாமரைப்பூ, ஆவாரை, நன்னாரி, வெட்டிவேர், துளசிவிதை, கரிசலை, கொட்டைக்கரந்தை, அமுக்குறா வேர், போன்றவைகள் பல உண்டு.  நுங்கு, பதநீர், வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம்,
இன்னீர்ப் (தர்பூசனி) பழம், முலாம் பழம், எலுமிச்சை, இன்னரத்தை (ORANGE), கொடி முந்திரி (GRAPES), உருளம்பழம் (SUPPOTA), கேழ்வரகுக் கூழ், கம்பங்கூழ், கற்றாழைச் சாறு போன்றவை ஊட்டம் தருவன.  இன்றைக்கும் சிறுவண்டிகளில் நன்னாரி குடிநீர் விற்பவர் உண்டு.  ஊட்டம்  தரும் குடிப்புகளாய் கூழ்களுண்டு.  பழச்சாறுகள் உண்டு. 
பழச்சாறுகளில் வெள்ளைச் சக்கரையும் சக்கரை பாகும் தவிர்ப்பது நலம்.  குடித்த உடனே தொண்டை கட்டு ஏற்படும்.  பழங்களை பழங்களாகவே சாப்பிட்டுவிடுவது கேடுகள் மிகுக்காமல் வழிவகுக்கும்.  குளம்பியும் தழைநீரும் நாச்சுவை அற்று போதல்பசி எடுக்காமை, செரியாமை, நரம்புகள் வலுவிழப்பு போன்ற பல பிணிகளை உண்டாக்கும்.  கோளாறுகளை கொண்டவையாக இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் இவற்றிற்கு அடிமைப்பட்டு உடல் இழந்து மதி இழந்தனர். 
இவ்வுடல் இழப்பு மூலம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், மருந்துகள் விற்பனை செய்வதன் மூலம் இவ்வளவு காலம் ஈட்டிய தொகைக்கு, குடிப்புகள் மூலம் அந்நிறுவ னங்- கள் ஈட்டிய தொகை புழுதி போன்றதே.  பத்து உரூவா  குடிப்பான்களை விட ஓர் உரூவா தழைநீர் போன்றன  மலிவானது என குடிப்பவர் தொகை அதிகம்.  இது பற்றி எவரும் வாய் திறப்பதில்லை.
வந்தேறி மற்றும் அயலார் குடிப்புகளை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கும் சிந்தனை வளராமல் தேசியம் வளருவது வெற்று கனவு.  வெள்ளை சக்கரையை ஏற்று பனை வெல்லத்தை புறக்கணித்து பல ஆயிரம் பனை ஏறிகளின் வாழ்வை அழித்தவர் நாம்தானே.  நஞ்சிலே சிறிதென்றும் பெரிதென்றும் இலக்கணம் வகுத்தவர் யார்.  அறியாமை எவர்க்கும் சொந்தம் என்று விளங்க காட்டுவது தழைநீர், குளம்பி பயன்பாட்டளர்கள் தான். 

வந்தேறி பொருட்களை புறக்கணிப்பதே வந்தேறிகளை புறக்கணிப்பதாம்.  அகப்பொருள் புறப்பொருளும் கூட வந்தேறிகளால் திரிக்கப்பட்டன.  அகப்பொருள் புறப்பொருள் எது என்று இன்றைய வரலாறு முன்கண்டவாறு  காட்டுகிறது.

---------------------------------------------------------------------------


அயலார் குடிப்புகளைப் புறக்கணியுங்கள்
(தழை நீர் (TEA), குளம்பி (COFFEE), குளிர் குடிப்புகள் (COOL DRINKS)
மூலிகை குடிப்புகளைப் பயன்படுத்துவீர்!

அயலார் வேதி மருத்துவத்தை புறக்கணியுங்கள்!
தாய்மண் (சித்தர்) மருத்துவத்தை போற்றுவீர்!

வெள்ளைச் சக்கரையை புறக்கணியுங்கள்,
பனை வெல்லத்தை பயன்படுத்துவீர்!

உப்பை மறப்பீர்!
உணர்வை வளர்ப்பீர்!
உப்பு விட்டாரை உள்ளளவும் நினை!
உப்பு மாந்த குலத்தின் எதிரி!

உடல்நலம் என்பது தலைமுறைச் சிந்தனை!

உணவைக் குடி!
நீரை உண்!
குடலால் வருவதே ஆதிப்பிணிகள்!
மற்றவையெல்லாம் மீதிப் பிணிகள்!

திருக்குறளை ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம். 
இயற்கை வாழ்வியத்திற்கு திரும்புங்கள்!



உடல்நலம் பேணும் பட்டறை
{15 நாட்கள்}

இரைப்பு (ASTHHMA) உளைச்சளி (SINUSITIS), தோற்பிணிகள்,உடல் பெருத்தல் போன்ற கடும்பிணி உள்ளோர்களும், நன்னிலையில் இருப்பவர்களும்,  எவரும் கலந்துகொண்டு பிணிகளிலிருந்து விடுதலை பெறுவதோடு, உடலை தூய்மைபடுத்தும் முறைகள்,நோன்பு முறைகள்,உணவு முறைகள் ஆகிய பயிற்சிகளும் தேறி, வருங்காலத்தில் தம்மையே பேணிக்கொள்ளும் நிலை பெறுவீர். அசித்தர் ஐயா நாடோறும் அறிவர்களின் உடல்நல அறிவுரை ஆற்றுவார்.இது ஒரு வாழ்க்கைமுறை பயிற்சிப் பட்டறை ஆகும் .பங்கு கொள்ள முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.முகவரி மற்றும் பேசி எண்ணை எம்மிடம் பதிவு செய்துகொண்டால், எமது தொடர்ச்சியான மருத்துவப் பணிகளை அறிவிப்பு செய்ய இயலும்.தொடர்புக்கு -9382719282



மூலிகை குடிப்புகள் மற்றும் சிறப்பு மூலிகைப் பொடிகள் எம்மிடம் கிடைக்கும்.நஞ்சுக் குடிப்புகளை எதிர்த்து,உடல்நல குடிப்பு தொழில் புரிய முனைவோருக்கு கருத்துரையும் பயிற்சியும் அளிக்கிறோம்.


உங்கள் ஊரை மூலிகை வளம் கொண்டதாய் ஆக்க முனைகிறீர்களா? எம்மைத் தொடர்பு கொள்ளவும்.




ஓக இருக்கைப் பயிற்சிகள் பிணியாளர்களுக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு பெண் ஆசிரியரே பயிற்சி அளிப்பார்.

உடல் தூய்மை பெற., ஒருநாள் மலத் தூய்மை, ஐயத்தூய்மை, திருக் குளியல் உட்பட உரூவா.500. முன் பதிவு செய்யவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக